Saturday, May 14, 2011

தலைவலி

பெரும்பாலானோர் அவதிக்கு உள்ளாவது தலைவலியினால்தான். ஒரு விஷயத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கும்பொழுதும் நாம் அதை தலைவலி என்றுதான் சொல்கிறோம். அனால் அந்த தலைவலியை பற்றி நாம் பேசப்போவதில்லை. அத்தகைய தலைவலியையும் உள்ளடக்கிய நிஜ தலைவலியை பற்றிதான் இங்கே விவாதிக்க இருக்கிறோம். 

தலைவலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். தூக்கமின்மையினால் தலைவலி வரலாம். வெயிலில் அதிகமாக சுற்றினாலும் தலைவலி வரலாம். நமக்கு பிடிக்காத சில விஷயங்களை கேட்க வேண்டி வந்தாலும் அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டி வந்தாலும் தலைவலி வரலாம். ஒரு சிலருக்கு கண்ணில் கோளாறு இருந்தாலும் தலைவலி வரும். ஒரு சிலருக்கு "மைக்ரேன்கள்" என்ற வகை தலைவலியும் வரும். பல்லில் வலி இருந்தாலும் தலைவலி வரும். புகை, தூசு போன்றவை அதிகம் நுகர வேண்டியிருந்தாலும் தலைவலி வரும். அதிக வெளிச்சத்தை கண்கள் சந்திக்கவேண்டியிருந்தாலும் தலைவலி வரும். சரியான தலையணை இல்லாமலோ அல்லது தவறான தலையனையுடனோ அல்லது ஏடாகூடமாக படுத்ததினாலோ கூட தலைவலி வரும். இப்படி தலைவலி வர பல காரணங்கள் உள்ளன.தலைவலிகள் ஒற்றைத்தலைவலி, இரட்டைத்தலைவலி, என்று அவை பலவகைகளிலும் வரும். 

பெரும்பாலானோர் தைலங்களை தேய்த்துக்கொள்ளுவார்கள். சிலர் மருத்துவரின் அறிவுரையில்லாமலேயே மாத்திரை மருந்துகளை உட்கொள்ளுவார்கள். சிலர் வெளியில் தூய காற்றில் உலாவுவார்கள். சிலர் குளிர்ந்த தண்ணீரை குடிப்பார்கள். இவை அப்போதைக்கு தற்காலிக விடுதலை கொடுத்ததாக அமையுமே அன்றி முற்றிலும் தலைவலியை நீக்கி விடாது. மீண்டும் தலைவலி குடைச்சல் கொடுத்துக்கொண்டேயிருக்கும். தலைவலி மிகுதியால் அவதிப்படுவோர் மிக அதிகம். ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் உள்ளன. 

தலைவலியை கவனியாது விட்டுவிட்டால் அது நம்முடைய செயல்பாடுகளில் தொய்வை உண்டாக்கிவிடும். பிறர் மீது எரிச்சலை ஏற்படுத்தும். நட்பு வட்டாரத்தை சுருக்கிவிடும். முகத்தில் வாட்டத்தை உண்டாக்கி அழகை கெடுத்துவிடும். உம்மனாமூஞ்சி, சிடுமூஞ்சி என்று பிறர் பேசும்படி செய்து விடும். தலைவலியை போக்கிக்கொள்ள நாம் அதிதீவிரமாக முயலவேண்டும். 

முதற்கண் நமக்கு ஏன் தலைவலி வருகிறது என்ற காரணத்தை நாம் தனிமையில் அமர்ந்து கவனிக்கவேண்டும். மருத்துவரிடம் சென்று மருந்தை வாங்கி உட்கொள்ளுமுன் நாமே நம் தலைவலிக்கான காரணத்தை அராய்ந்தோமானால் நாமே மருந்துகளில் துணையின்றியே தலைவலியை போக்கிவிட முடியும். இன்றைய பொழுது நாம் எத்தகைய பணியை செய்தோம். காலை முதல் மாலை வரை நம்முடைய ஆரோக்கிய நிலை எப்படி இருந்தது. தலைவலி இல்லாமல் இருந்த நிலை எப்பொழுது, எத்தகைய செயலை செய்த பொது வந்தது என்று ஆராய்ந்தால் தலைவலிக்கான காரணத்தை கண்டுபிடித்துவிடலாம். அடுத்த நாள் முதல் தலைவலியை ஏற்படுத்தும் அத்தகைய செயலை தவிர்ப்பதன் மூலம் தலைவலியை போக்கி விடலாம். 

அனால் அத்தகைய செயல்கள்தான் நமக்கு இயல்பானது அல்லது வாழ்வாதாரத்துடன் கலந்தது எனும் பொழுது அதை எப்படி தவிர்ப்பது. அதாவது வெயிலில் போகாமல் இருக்க முடியாது, அதிக வெளிச்சத்தை பாராமல் இருக்க முடியாது, மிக அதிக இரைச்சல், புகை மண்டலத்தில் நடமாடாமல் இருக்க முடியாது என்று பல முடியாதுகள் நம்முடைய வாழ்வில் கட்டாயம் எனும் பொழுது நாம் வெறுமனே அவற்றை தவிர்க்க முடியாது. பின்பு எப்படித்தான் தலைவலியிலிருந்து நாம் விடுபடுவது. 

அதற்கு மிக எளிதான ஒரு வழியை இங்கே கூறுகிறோம். அதை கடைபிடித்தல் எளிது. அனால் அதற்கு தேவை விடா முயற்சி மட்டுமே. மிகச்சிறந்த பயிற்சியோ, மருந்தோ இன்றி நீங்கள் செய்யும் அனைத்து இயல்பான பணிகளை தவிர்க்காமல் எளிதில் கையாளும் வண்ணம் ஒரு உபாயத்தைத்தான் இங்கே கூறப்போகிறோம். முயன்று பாருங்கள். பயனடைந்தோர் பிறரிடம் கூறுங்கள். 

நம்முடைய மூளை நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட, நாம் கேட்காவிட்டாலும் கூட, அது தன்னிச்சையாக பல ஒலிகளை தன்னகத்தே பதிவு செய்கிறது. இத்தகைய ஒலிகள் மற்றும் பதிவுகள் நம்முடைய மூலையில் ஒரு பெருக்கத்தை உண்டாக்குகின்றன. எப்படி நம்முடைய வீட்டில் தேவையற்ற பொருட்கள் குவிவதால் அலமாரிகள் மற்றும் அறைகளால் அவை நிரம்பி காணப்படுகின்றனவோ அவ்வாறே இத்தகைய தேவையற்ற பதிவுகளால் மூளை பெருக்கமடைந்து நமக்கு தேவைப்படும் பதிவுகளை ஏற்க மறுக்கிறது. உதாரணமாக நீங்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்களோ பாடத்தைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அங்கே தற்செயலாக ஏற்படும் ஒலிகளை பற்றி எந்த ஈர்ப்புமிருக்காது. ஆசிரியர் கூறுவது மட்டுமே கவனமாக இருக்கும். அனால் அங்கே ஆசிரியர் ஏற்படுத்தும் ஒலியலைகளை தவிர பல்வேறு ஒலியலைகள் உலாவிக்கொண்டிருக்கின்றன. அவற்றை நீங்கள் அறிய மாட்டீர்கள். அங்கே அருகில் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தோ, லாரியோ ஏற்படுத்தும் ஒலிகள், அவ்வழியாக செல்வோர் ஏற்படுத்தும் ஒலிகள், தற்சயலாக ஆசிரியர் தவறவிட்ட சாக்கின் ஒலி, பின் சீட்டில் இருந்த ஒருமாணவன் பையை திறக்கும் ஒலி, அவன் மேசையை அசைத்த ஒலி, என்று நம்மால் கவனிக்க மறந்த பல ஒலிகள் நம்முடைய அனுமதியின்றியே நம்முடைய மூளையில் பதிவாகிறது. இவற்றை நாம் அறியவில்லை. வகுப்பறையில் ஆசிரியர் ஏற்படுத்திய ஒளியை தவிர மற்றபடி அமைதி இருந்ததாகத்தான் நாம் நினைத்துக்கொண்டிருப்போம். இப்படி நம்மையுமறியாமல் பதிவான ஒலிகள் மேலும் நாம் நமக்கு வேண்டிய கருத்துக்களை கவனித்து பதிவு செய்ய வேண்டி வரும்பொழுது அவற்றிற்கு இடம் கொடாது. நாம் கட்டாய பதிவுக்கு முற்படும்போது மூளையின் பகுதி பெருக்கமடைந்து அவற்றிக்கு இடம் கொடுக்கிறது. அப்பொழுதுதான் நமக்கு தலைவலி ஆரம்பிக்கிறது. தலைவலியை மட்டும் அவை ஏற்படுத்துவதில்லை நமக்கு புதிய பதிவுகளை தடுப்பதன் மூலம் அவை "நினைவுத்திறனையும்" குறைத்து மறதிக்கு வழிவகுக்கின்றன. தலைவலி மெல்ல அதிகமாகி பிறகு நம்மை பெரும் பாடு படுத்துகின்றது. நீங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் ஒரு மருந்தையோ அல்லது வேறு உபாயத்தையோ கையாளும்போழுது அவற்றிலிருந்து விடுபட்டதாக உணர்கிறீர்கள். மறுபடியும் மறுநாள் அவ்வாறே தலைவலி உருவாகிறது. இத்தகைய நிலையை முற்றிலுமாக போக்க வேண்டியது நம்முடைய கடமையாகிறது. இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள உபாயத்தை கையாண்டு பாருங்கள். 

நீங்கள் இரவில் அனைத்து செயல்களையும் முடித்துவிட்டு படுத்துக்கொள்ளுங்கள். ஒருபுறமாக ஒருக்களித்துப்படுத்துக்கொள்ளுங்கள். வலது புறமாயின் நல்லது. இப்போது உங்களது வலது காது தலையணையில் நன்கு பதிந்து இருக்கட்டும். இடது கையை தலைக்கு மேலே நன்கு நீட்டி உயர்த்தி படுத்துக்கொள்ளுங்கள். இடது தோள் பகுதி இடது காதின் மீது பட்டு அதை நன்கு மூடியிருக்கவேண்டும். இப்பொழுது உங்களுக்கு அங்கே வெளியில் ஏற்படும் ஒலிகள் எதுவும் கேட்காது. நீங்கள் எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காதீர்கள். அவ்வாறு சிந்தனைகள் ஏற்பட்டாலும் கட்டாயமாக தவிருங்கள். இப்பொழுது உங்கள் மனதிலிருந்து ஏற்படும் ஒலியதிர்வுகளை கவனியுங்கள். அவை உங்களுக்கே மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தும். அவை பலவிதமாக இருக்கும். எப்பொழுதோ பேருந்தில் சென்றது, எங்கேயோ மார்க்கெட்டில் யாரோ கூச்சல் போட்டது. ஏதோ இரு விசேஷத்தில் பாட்டுகச்சேரியை கேட்டது, சிறுவயதில் வகுப்பறையில் சத்தம் போட்டது என்று பலவித ஒலிகள் கேட்கும். இவற்றில் விசேஷம் என்ன என்றால் நீங்கள் அறிந்திராத மொழிகளிலும் கூட அத்தகைய ஒலிகள் இருக்கும். அவற்றை நீங்கள் கண்டும் காணாதது போலிருந்தால் அந்த ஒலியின் அளவு அதிகமாகிக்கொண்டே வரும். அவற்றை கூர்ந்து கவனிக்க முற்படும்போது அந்த ஒலிகள் நின்றுவிடும். மீண்டும் நீங்கள் அமைதியாக இருக்கும் பொழுது அது கேட்க தொடங்கும். இவ்வாறு நீங்கள் கவனிப்பது, அவை நிற்பது என்று நடக்கும்போழுதே நீங்கள் தூங்கிப்போவீர்கள். காலையில் எழுந்திருக்கும் பொழுது நன்கு தூங்கியதாக உணர்வீர்கள். இத்தகைய பயிற்சியை நீங்கள் ஒருநாள் இரண்டுநாள் என்று விட்டுவிடாமல் பலநாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் தலைவலியிலிருந்து பூரண குணம் பெறுவதோடு மறதியிலிருந்தும் முற்றிலும் விடுபடலாம். பலநாட்களுக்குப்பிறகு இத்தகைய ஒலிகள் எழுவது நின்று போகும். அத்தகைய நிலையில் தலைவலி உங்களிடமிருந்து விடை பெற்றது என்றே அர்த்தம்.  

பிறகு நீங்கள் இதற்கு முன்பு எத்தகைய செயல்களில் ஈடுபட்டால் தலைவலி வந்ததோ அத்தகைய செயல்களில் ஈடுபட்டாலும் தலைவலி என்பது வரவே வராது. பயிற்சியை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள். மருந்தோ வேறு எந்த உபாயங்களோ இல்லாமல் மிகுந்த பயனை தரவல்லது.   

No comments:

Post a Comment